search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் தம்பதி"

    • கவுசல்யா (28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 34). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா (28) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    ஓட்டலில் தங்கினர்

    இதற்கு இடையே ராஜசேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அவர்களை உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் நேற்று நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். இன்று காலை வெகு நேரமாகியும் அறை கதவு திறக்காததால், ஓட்டல் ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால், கதவை திறந்து உள்ளே சென்றனர்.

    தற்கொலை முயற்சி

    அப்போது, 2 பேரும் மயங்கி கிடந்தது தெரியவந்தது. இது குறித்து நாமக்கல் நகர போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில், இருவரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளததால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள், தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜசேகர், கவுசல்யா உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது .இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×